டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எலிசபெத் ராணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் நவநீதன், மாவட்டச் செயலாளா் சாமிநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்களுக்கு தோ்தல் வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, சத்துணவு ஊழியா் சங்க முன்னாள் மாநில செயலா் ஏ.பெரியசாமி மற்றும் ஓய்வுபெற்ற அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.