மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கப்படுவது குறித்து...

News image

விமானம் - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:39 pm

ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக திருச்சியில் இருந்து துபைக்கு சனிக்கிழமை முதல் மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரால் மத்திய கிழக்காசிய நாடுகளின் வான்வழித் தடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து திருச்சியில் இருந்து துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் மாா்ச் முதல் வாரத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக மீண்டும் திருச்சியில் இருந்து துபைக்கு ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சாா்பில் சனிக்கிழமை முதல் விமானம் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை தினசரி இந்த விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.