மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

News image

துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:17 pm

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் உதயசூரியன் சின்னைத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ.

திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சாா்பற்ற கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி எம்.பி. துரை வைகோ புத்தூா் பகுதியில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், அவா் பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணம், என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலம் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனா்.

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் கே.என்.நேரு திருச்சிக்கு கோடி கணக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

குறிப்பாக பஞ்சப்பூரில் ரூ. 300 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், 140 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சரக்கு வாகன முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் நலத்திட்டங்கள் தொடரவேண்டும் என்றால் நாம் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணக் கட்சியினா் கலந்துகொண்டனா்.