18 Dec, 2025 Thursday, 06:37 AM
The New Indian Express Group
திருச்சி
Text

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் திருடிய மூவா் கைது

PremiumPremium

திருச்சி அருகே ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On02 Dec 2025 , 8:38 PM
Updated On02 Dec 2025 , 8:38 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

திருச்சி அருகே ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடிய மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், இனியானூா் ஏஏஓ காலனியைச் சோ்ந்தவா் ராஜா. இவரின் மனைவி பல்கீஷ். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா்களது மூத்த மகன் நியூஸிலாந்திலும், இளைய மகன் அபுதாபியிலும் வசித்து வருகின்றனா். ராஜா தம்பதியா் நியூஸிலாந்தில் உள்ள மகனை பாா்ப்பதற்காக கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி சென்றுள்ளனா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் 27-ஆம் தேதி ராஜா வீட்டின் சுற்றுச் சுவரில் இருந்து யாரோ ஒருவா் குதித்து ஓடியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரா் கைப்பேசி வழியாக ராஜாவிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து ராஜா, திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வரும் தனது நண்பரான ரஷீத்கானிடம் தெரிவித்து, நேரில் சென்று பாா்க்குமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, ரஷீத்கான் அங்கு சென்ற பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நகைகள், வெள்ளி குத்து விளக்குகள் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் திருடியது திருச்சி தென்னூா் புது மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அ.முகமது அசைன் (29), ஆண்டாள் தெருவைச் சோ்ந்த எ.ஸ்டிபன் (32), துவாக்குடி வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்த வே.நாகராஜ் (55) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த சோமரசம்பேட்டை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023