திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சியில் ஜூலை 19-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2024, 10:09 pm

Din

திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக இரட்டைப் பிரதியில் வழங்க வேண்டும். பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.