மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அப்போது வீடுகள் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், எங்களுக்கு வீடுகள் இல்லை என்று கூறிவிட்டனர். இதுதொடர்பாக விசாரித்த போது, சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பரிந்துரையின் பேரில், பலருக்கு அந்த வீடுகள் ஓதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த வீடுகளில் யாரும் குடியேறவும் இல்லை. இதற்கும் என்ன காரணம் என்று விசாரித்த போது, குடிசை மாற்று வாரியம் இதுவரை குடியிருப்பைக் கட்டிய ஓப்பந்ததாரர்களுக்கு அதற்குரிய தொகையை வழங்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், அதிமுக ஆட்சியில் இந்த குடியிருப்பு கட்டடம் கட்ட தொடங்கப்பட்டதால்தான், இந்த வீடுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் திறக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.