ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம், இலவச எரிவாயு வழங்கும் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலச் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழ் வரும் நல வாரியங்களின் திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவது தாங்கள்தான் என்கின்றனர் வருவாய்த் துறையினர்.