நாங்கள் பிடித்த எத்தனையோ குற்றவாளிகள் எளிதில் தப்பித்துள்ளனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒருவரைப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் ஓப்படைத்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்து அனுப்பிவைத்துவிடுகின்றனர். குறிப்பாக, "கிராசிங்' இடங்களில் நிற்கும் ரயில்களில்தான் திருட்டு அதிகம் நடைபெறுகிறது. ஆனால், இதைக் கண்காணிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையங்களுக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் வழங்குவதன் மூலம் இதற்குத் தீர்வு காண வழி உள்ளது.