வாரியத்தின் அறிவுரைப்படி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒழுங்குமுறை கமிட்டியின் பணியாகும். அதன்படி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணாராஜசாகர், கபினி, மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் நாள்தோறும் நீர்வரத்தைத் திரட்டுதல், மாதாந்திர அடிப்படையிலான நீர் விடுவிக்கும் அளவைக் கண்காணித்தல், கர்நாடக- தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் நாள்தோறும் திறந்துவிடப்படும் நீரின் அளவைக் கண்காணித்து வாரியத்துக்கு தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளை ஒழுங்குமுறை கமிட்டி மேற்கொள்ள வேண்டும்.