காற்று ஒலிப்பான்: திருச்சி மாநகரில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநர்களும், அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் வகையிலும், கூட்டத்தைக் கலைக்கும் வகையிலும் வாகனங்களை ஓட்டுகின்றனர். அப்படி இயக்கும் வாகன ஓட்டிகள் மீது காற்று ஒலிப்பான் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகையை வசூல் செய்து மாநகரக் காவல் அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது. மேலும், அவ்வப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுடன் மாநகரக் காவல் துறை இணைந்து சிறப்பு தணிக்கை நடத்தி காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு வருகின்றன.