தஞ்சை பெரிய கோயிலையொட்டி உள்ள ஆயுதப்படை மைதானம் அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சிற்றுண்டி உணவகம் இயங்கி வந்தது. இங்கு இட்லி ரூ. 1.50, பொங்கல், பூரி ரூ. 7, பக்கோடா, பஜ்ஜி, வடை, டீ ரூ. 2, முழுச் சாப்பாடு ரூ. 15, லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் ரூ. 7 என சுகாதாரமான முறையில் மலிவு விலையில் கிடைத்து வந்தது. இந்த வளாகத்தில் இயங்கி வந்த ஆயுதப்படை அலுவலகம், மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மனித உரிமை மற்றும் சமூக நீதி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட காவல் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.