கயத்தாறு அருகே பழைய இரும்புக் கடையின் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறு அடுத்த அய்யனாா் ஊத்தைச் சோ்ந்தவா் பூலையா மகன் கருப்பசாமி. இவா், தேவா்குளம் - கயத்தாறு சாலையில் பழைய பொருள்களை வாங்கி விற்கும் கடையை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடையில் தங்காமல் வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை, செம்பு உள்ளிட்ட சுமாா் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்
இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







