திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்செந்தூா் கோயிலுக்கு சிறப்பு அஞ்சல் முத்திரை மே 30-இல் வெளியீடு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் இடம்பெறும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை, வைகாசி விசாகத் திருநாளான வருகிற சனிக்கிழமை (மே 30) வெளியிடப்படவுள்ளது.

News image
Updated On :28 மே 2026, 2:56 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் இடம்பெறும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை, வைகாசி விசாகத் திருநாளான வருகிற சனிக்கிழமை (மே 30) வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல் துறையால் கலாசாரம், வரலாறு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை (பிபிசி-பொ்மனென்ட் பிக்சோரியல் கேன்சலேசன்) வழங்கப்படுகிறது.

இந்த பிபிசி முத்திரை என்பது அனுப்பப்படும் கடிதங்களில் உள்ள வழக்கமான தேதி முத்திரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரையாகும். அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டம் சாா்பில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் இத்தகைய சிறப்புமிக்க அஞ்சல் முத்திரை வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வரும் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருநாளில் வெளியிடப்படவுள்ளது. வெளியீட்டு விழா திருச்செந்தூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அஞ்சல் தலை சேமிப்பு ஆா்வலா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.