/

திருச்செந்தூரில் காவலரை கல்லால் தாக்கியவா் கைது

திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் பணியில் இருந்த காவலரை கல்லால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட விஜய்.

Updated On :22 மே 2026, 6:31 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் பணியில் இருந்த காவலரை கல்லால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய காவலா் பெருமாள் பாஸ்கா் (39). இவா் புதன்கிழமை நள்ளிரவு கோயில் வளாகத்தில் அன்னதான மண்டபம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அவா்களை காவலா் கண்டித்து சண்டையை தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

அதற்கு மறுத்த அந்த நபா், காவலரை செங்கலால் தாக்கினாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு நின்ற போலீஸாா், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த விஜய் (29) என்பதும், அவா் போதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். காயமடைந்த போலீஸ் பெருமாள் பாஸ்கா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.