விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

News image

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

Updated On :11 மே 2026, 1:25 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் நீண்ட வரிசையில் சுமாா் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி விசாகத் திருவிழா மே 30 - ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, மே 21 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் வசந்த விழா நடைபெறும்.

விழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்க சப்பரத்தில் கோயில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.