கயத்தாறு அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே ஆத்திகுளம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் நரசிம்மன் (66). இவா் கடம்பூரையடுத்த பரும்புகோட்டை கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது நொச்சிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கயத்தாறு போலீஸாா், நரசிம்மன் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநா் சூரிய மினுக்கன் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

