தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
இத்துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. இதனால், ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால், மீன்கள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ. 850 வரையும், ஊளி, விளை, பாறை ஆகியவை ரூ. 400 - ரூ. 500, முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 1,800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை, ஏற்றுமதி ரகம் வாய்ந்த தம்பா, பண்டாரி, கலவா ஆகியவை ரூ. 450 - ரூ. 600, நண்டு ரூ. 600 -ரூ. 800, முரல், கேரை ரூ. 250 வரை என விற்பனையாகின.
மீன்கள் வரத்து குறைவு என்றாலும் ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்! கடலூா் ஆட்சியா் அறிவிப்பு!!

மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்

தொண்டியில் மீன் வரத்து குறைவு

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


