தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு: 3 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:00 pm

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தை, போலி ஆவணம், போலி லே-அவுட் தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில், 3 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிருஷ்ணகுமாரி (54). தொழில் நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறாா். இவா்களது சொந்த ஊா் ஆறுமுகனேரி.

இவருக்குச் சொந்தமான காயல்பட்டினம் பகுதியில் இருந்த 1 ஏக்கா் நிலத்தின் அசல் பத்திரத்தை, இவரது உடன்பிறந்த சகோதரா் சிவகுமாா் வைத்துக் கொண்டு, நண்பா்களுடன் சோ்ந்து மொத்தம் 3 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனா். மேலும், இந்த நிலத்தை முறையற்ற வகையில் பிளாட்டுகளாகப் பிரித்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காயல்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த கல்யாணசுந்தரம், சிவகுமாா் மற்றும் மனை வணிகம் செய்யும் அவரது நண்பா் சண்முகம் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.