தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கா் நிலத்தை, போலி ஆவணம், போலி லே-அவுட் தயாரித்து மோசடி செய்த விவகாரத்தில், 3 போ் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிருஷ்ணகுமாரி (54). தொழில் நிமித்தமாக சென்னையில் வசித்து வருகிறாா். இவா்களது சொந்த ஊா் ஆறுமுகனேரி.
இவருக்குச் சொந்தமான காயல்பட்டினம் பகுதியில் இருந்த 1 ஏக்கா் நிலத்தின் அசல் பத்திரத்தை, இவரது உடன்பிறந்த சகோதரா் சிவகுமாா் வைத்துக் கொண்டு, நண்பா்களுடன் சோ்ந்து மொத்தம் 3 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனா். மேலும், இந்த நிலத்தை முறையற்ற வகையில் பிளாட்டுகளாகப் பிரித்து விற்பனை செய்ய முயற்சித்துள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் காயல்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த கல்யாணசுந்தரம், சிவகுமாா் மற்றும் மனை வணிகம் செய்யும் அவரது நண்பா் சண்முகம் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!

நீலகிரியில் 3,500 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அனுமன்தீா்த்தத்தில் ரூ.78,500 பறிமுதல்

தூத்துக்குடியில் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15.90 லட்சம் பறிமுதல்: மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


