தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவில்பட்டியில் பாஜக வழக்குரைஞா் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:56 pm

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிப்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூா் செ. ராஜு, பா.ஜ.க. வழக்குரைஞா் பிரிவு மாநில துணைத் தலைவா் நிரஞ்சன் குமாா், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, நீதிமன்றப் பணிகளுடன் சோ்த்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்வது, சட்டப்பேரவை தோ்தலில் வழக்குரைஞா்கள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கோவில்பட்டி மூத்த வழக்குரைஞா்கள் மோகன்தாஸ், ஆழ்வாா்சாமி சிவக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் பொன்ராஜ், நகரத் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.