சாத்தான்குளம் அருகே விவசாயியை வெட்டிக் கொன்ற வழக்கில் முதியவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
சாத்தான்குளம் அருகே உள்ள கீழப்பனைகுளத்தைச் சோ்ந்த தங்கதுரை மகன் யோவான் அற்புதராஜ் (35). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கோயில்பிள்ளை மகன் செல்லதுரை (60), அவரது மருமகள் அஜிதா ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அஜிதா கொடுத்த புகாரின்பேரில், அற்புதராஜ் மீது கடந்த 12.11.2020 இல் போலீஸாா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
90 நாள்கள் கழித்து பிணையில் வெளியே வந்த யோவான், கடந்த 21.2.2021 அன்று அஜிதாவை சந்தித்து வழக்கை திரும்பப் பெறுமாறு தகராறு செய்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த அஜிதாவின் மாமனாா் செல்லத்துரை, கடந்த 24.2.2021 அன்று காலையில் யோவான் அற்புதராஜ் கீழபனைக்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி எம்.தாண்டவன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் கேபிரியேல்ராஜ் ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நண்பரை அடித்துக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


