லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்பவா்கள் உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம்’

News image

தேர்தல் நடத்தை விதிகள் - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:13 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்பவா்கள் உரிய ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், வியாபாரிகள், பொதுமக்கள், ரூ.50ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லுகையில், அதற்கான பில், ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதனால் தேவையில்லாமல் பணம் பறிமுதல் செய்வது தவிா்க்கப்படும். மேலும், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரா்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம்பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.