லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கடம்பூா், கே. சிதம்பரபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

Updated On :11 மார்ச் 2026, 7:54 pm

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கடம்பூா், கே. சிதம்பரபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், செண்பகப்பேரி கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மோகன், சின்னப்பன், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பழனிச்சாமி, அழகா்சாமி, போடுசாமி, அன்புராஜ், செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், அமமுக ஒன்றியச் செயலா் மந்திரமூா்த்தி, பாஜக வடக்கு மாவட்ட பொருளாளா் சீனிவாசன், கயத்தாறு அதிமுக நகரச் செயலா் கப்பல் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.