ஆறுமுகனேரி, ஆத்தூா், குரும்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக நெல் அறுவடை மற்றும் உப்பள பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. மேலும், ஆறுமுகனேரி குளம், நல்லூா் கீழக்குளம், நல்லூா் மேலக்குளம் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் புறையீா், அங்கமங்கலம், ராஜபதி பகுதிகளில் நடைபெறும் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆறுமுகனேரி சுற்றுப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் அந்தப் பணிகளும் பாதிப்படைந்தது. அதிகாலை முதலே பெய்த மழையால் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வெழுத ஆயத்தமான மாணவா், மாணவிகளும் பெற்றோா்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. மழையின் காரணமாக இப்பகுதிகளில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
தொடர்புடையது
விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு!

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை

களக்காடு, நான்குனேரியில் பரவலாக மழை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


