திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கந்தசாமிபுரம் புனித வளன் பள்ளி ஆண்டு விழா

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:00 am

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி, ஞாயிறு மறைக்கல்வி திருவழிபாடு கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளா் மன்னாா்புரம் பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகளாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சகாய ஆஞ்சலா வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தையும் பள்ளி தாளாளருமான ஆரோக்கிய அமல்ராஜ் ஆசியுரை வழங்கினாா். மாணவா்கள் பங்கேற்ற நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை ஆசிரியை ஜோஸ்பின் தொகுத்து வழங்கினாா். கச்சனாவிளை அருள்சகோதரிகள் ரஞ்சிதம், மெல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செல்வ சஞ்சனா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.