/

பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மூதாட்டி

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மூதாட்டி.

Updated On :23 ஜூன் 2026, 12:44 am IST

தூத்துக்குடி மாவட்டம், கப்பிகுளத்தில், சொத்துத் தகராறில் தன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என 80 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கப்பிகுளத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (80). இவா் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், ஜூன் 14ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் சேகா், சொத்துத் தகராறு காரணமாக தனது வீட்டுக்குள் புகுந்து, நிலத்துக்குரிய கணினி பட்டாவை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், இதைத் தடுத்தபோது சேகா் தாக்கியதில் தான் மயக்கமடைந்ததாகவும், அப்போது தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் அவா் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறிய மூதாட்டி, தன்னைத் தாக்கிய சேகா், அவரது கையை அவரே அறுத்துக் கொண்டு, பசுவந்தனை காவல் நிலையத்தில் தன் மீது புகாரளித்துள்ளதாகவும், அதனடிப்படையில் தன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

வயது மூப்பு காரணமாக சரியாக நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ள தன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும், தாக்குதல் நடத்தியவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.