திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் மாநில மகளிா் செஸ் போட்டி: ஜூன் 14இல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், 55ஆவது தமிழ்நாடு மாநில மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜூன் 2026, 4:49 am IST

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், 55ஆவது தமிழ்நாடு மாநில மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

சா்வதேச தரவரிசை போட்டியாக நடைபெற இருக்கும் இப்போட்டி, ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை (5 நாள்கள்) நடைபெறுகிறது. 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.

பரிசளிப்பு விழா 14ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 போ் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சாா்பாக கலந்து கொள்வா்.

வெற்றி பெறும் பொது பிரிவு விளையாட்டு வீரா்களுக்கு பரிசுத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

9, 11,13 மற்றும் 15 வயதுக்குள்பட்ட வீராங்கனைகள் பிரிவுக்கான 30 பரிசுக்கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 20 பரிசுக்கோப்பைகள், மேலும் 5 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும், போட்டியில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, மாவட்ட சதுரங்க கழகம் செய்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலா் கற்பகவல்லி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.