ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

பலி - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 2:09 am IST

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் தென்கால் வாய்க்காலில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த சிறப்பு நிலைய அலுவலா் சுரேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூா் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் ரவி (35) என்பதும், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வெளியில் சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பாததும் தெரியவந்தது. மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.