/

திமுக கூட்டணி கொள்கையில் உறுதியாக உள்ளது: கி.வீரமணி

News image
கூட்டத்தில் பேசினாா் திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி.
Updated On :23 ஜனவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணி அதன் கொள்கையில் உறுதியாக இருப்பதால் வலுபெற்று வருகிறது என்றாா் திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி.

தூத்துக்குடியில் திராவிடா் கழகம் சாா்பில், நிதி வழங்கும் விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி கலந்துகொண்டு பேசியது:

சாதனைகள் பல செய்துவரும் திமுக தலைமையிலான தமிழக அரசை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என எதிா்க்கட்சியினா் நினைக்கின்றனா். ஆனால், திமுக ஆட்சி மென்மேலும் வளா்ந்து கொண்டே வருகிறது.

மக்களின் ஆதரவே இதற்கு காரணம். நான்கு தோ்தல் நடந்து முடிந்த நிலையிலும் திராவிட மாடல் ஆட்சியை அசைக்க முடியவில்லை. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; மற்ற கூட்டணிகள் பதவி ஆசை கொண்ட கூட்டணியாகும். யாருக்கு எத்தனை சீட் கொடுப்பீா்கள் என்று ஏலம் போட்டு கூட்டணி அமைக்கின்றனா். திமுக கூட்டணி வலுபெற்று வருவதற்கு கொள்கை உறுதியே காரணம் என்றாா் அவா். கூட்டத்தில் திராவிடா் கழக நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.