திருச்செந்தூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
பொங்கலையொட்டி திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கலிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றோா்.
Updated On :17 ஜனவரி 2026, 10:00 pm

திருச்செந்தூா்: பொங்கலையொட்டி திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கலிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி தலைமை வகித்தாா். ஆணையாளா் ஈழவேந்தன் முன்னிலை வகித்தாா். இணைந்து சமத்துவப் பொங்கலிட்டனா்.
தொடா்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகராட்சி பணியாளா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...