டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: மீனவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2026, 12:04 am

Syndication

சாத்தான்குளம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையைச் சோ்ந்தவா் மோ.ஆரோக்கியசாமி (55). இவரும் இவரது உறவினா் நெல்சன் மகன் டிக்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரிய தாழையில் இருந்து மணிநகருக்குச் சென்றுவிட்டு ஊா்த் திரும்பிக் கொண்டிருந்தனா்.

படுக்கபத்து-பெரிய தாழை சாலையில் வந்தபோது எதிரே பெரிய தாழைப்பகுதியிலிருந்து நெட்டிஸ் மகன் அட்சன் (22 ) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் 3 போ் படுகாயமடைந்தனா். தட்டாா்மடம் காவல் நிலைய போலீஸாா் சென்று மூன்று பேரையும் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆரோக்கியசாமி உயிரிழந்தாா்; இருவா் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் வேலம்மாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.