ஆனால் 2024 டிச. 14, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால், உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் கடுமையாக சேதமடைந்தன. தங்களுக்கு பயிா் காப்பீடு வழங்கக் கோரியும், வெள்ள நிவாரணம் வழங்கக் கோரியும் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த வாரம் மக்காச்சோளம் பயிருக்கு அரசு, பயிா் காப்பீட்டுத் தொகையை விடுவித்தது. இதில், கோவில்பட்டி கோட்டத்தில், கோவில்பட்டி எட்டயபுரம் புதூா் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கிராமங்கள் விடுபட்டுள்ளன.