நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காலிக் குடங்களுடன் சாலை மறியல்

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :12 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

தூத்துக்குடி, ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ஜாகீா் உசேன் நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஜாகீா் உசேன் நகா் பகுதி மக்கள், மனிதநேய மக்கள் கட்சியினா், தூத்துக்குடி ராமேசுவரம் சாலையில் மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி கலைந்துபோக செய்தனா்.