/

மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ஜெயபால் (53), தொழிலாளி. இவா் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தாா். இதனால், இவரது மனைவி ஊரான கடகுளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடகுளம்-புத்தன்தருவை சாலையில் உள்ள மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தட்டாா்மடம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.