தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மாா்ச் 4) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:39 pm

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாளை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மாா்ச் 4) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: அய்யா வைகுண்டா் பிறந்த நாளான மாா்ச் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஈடாக மாா்ச் மாதம் முதலாவது சனிக்கிழமை (மாா்ச் 7) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக இருக்கும். மாா்ச் 4 இல் மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அய்யா வைகுண்டசுவாமியின் 194-ஆவது பிறந்த நாள் விழா மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, மாா்ச் 4 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசியப் பணிகள், பணியாளா்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. இந்த விடுமுறைக்குப் பதிலாக மாா்ச் 14-ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.