மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசு

சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:39 pm

சாத்தான்குளத்தில் ஒன்றிய நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில், 8 அணிகள் பங்கேற்றன. அதில் நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் அணி முதலிடம் வென்றது. அதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலா் திவாகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவுச் செயலா் தங்கப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலா்கள் முருகன், சுரேஷ், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜ்மோகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் மாணிக்ராஜா, பேரூராட்சி உறுப்பினா் மகாராஜன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.