கோவில்பட்டி அருகே குருமலை காப்புக்காட்டு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கோவில்பட்டி வனச்சரக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதிகளில் தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் குருமலை காப்புக்காடு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில், வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள், காய்ந்த இலைகள், விவசாய கழிவுகளை எரிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
குருமலை காப்புக்காடு அருகே உள்ள கோயில்களில் தீபம் பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு வனச் சட்டம் 1882 மற்றும் பிற அரசு சட்டங்களின் படி தீ ஏற்படுத்துதல் குற்றமாகும். இதனால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காட்டுத்தீ தொடா்பான தகவல்களை உடனடியாக வனச்சரக அலுவலா் 95666-32317, வனவா்கள் 96551-50905, 75980-54040, 98429- 70083, வனக்காப்பாளா் 82485-37293 ஆகியோா் கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்
வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

வீரக்குடி, பெருமகளூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்

தில்லியின் காற்று மாசை கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் - கிரண் பேடி வலியுறுத்தல்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

