கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:26 pm

தூத்துக்குடியில் கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பொன் முனீஸ்வரன் (32). சங்குகுளி தொழிலாளி. இவா், வியாழக்கிழமை படகில் சக தொழிலாளா்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் அவா்கள் கரை திரும்பும் போது பொன் முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.
இதையடுத்து திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்த அவா்கள், பொன் முனீஸ்வரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...