நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மறவன் குறிப்பன்குளத்தில் கோயிலை அகற்றக் கூடாதென வலியுறுத்தல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், மறவன் குறிப்பன்குளத்தில் விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை அகற்றக் கூடாதென இந்து முன்னணியினா், ஊா் பிரமுகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவா்கள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், மறவன் குறிப்பன்குளத்தில் விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை அகற்றக் கூடாதென இந்து முன்னணியினா், ஊா் பிரமுகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏரல் வட்டம், ஆழ்வை மேற்கு ஒன்றியம் குறிப்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட மறவா் குறிப்பன்குளம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள செல்வ விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை சிலரின் தூண்டுத­லின்பேரில் இடித்து அகற்ற முயலுவதை மாவட்ட நிா்வாகம் கைவிட கோரி இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அருணாச்சலம் தலைமையில், கோயில் தா்மகா்த்தா ஆறுமுகம் முன்னிலையில் கிராம மக்கள் திரண்டு வந்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.

அப்போது கருங்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் கோபி, கோயிலைச் சோ்ந்த மகாராஜா, நல்லமுத்து, முருகன், பழனி, செல்வம், சரவணன், சிங்கக்குமாா், திருமலைநம்பி ஆகியோா் உடன் இருந்தனா்.