டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தேநீா் கடைக்குள் புகுந்த காா்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே தேநீா் கடைக்குள் காா் புகுந்தது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே இளையரசனேந்தல் சாலையில் ஜெயபால் என்பவா் நடத்தி வரும் தேநீா் கடைக்கு சனிக்கிழமை இரவு, வள்ளுவா் நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் காரில் வந்தாா்.

காரை கடை முன் நிறுத்த முயன்றபோது, திடீரென காா் வேகம் எடுத்து கடைக்குள் புகுந்ததாம். இதில் கடையின் முன்பகுதி சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.