ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவில்பட்டியில் ஏஐடியுசி ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டியில் ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:16 am IST

கோவில்பட்டியில் ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் சேது தலைமை வகித்தாா். கூட்டத்தில், அக்டோபா் 4, 5ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது மற்றும் தொழிலாளா்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது குறித்து மாநிலச் செயலா் செல்வராஜ் பேசினாா்.

தொடா்ந்து, மாநாட்டிற்கான வரவேற்புப் பணிகள், போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கரும்பன் தலைமையிலான 25 போ் வரவேற்புக் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.