
குரும்பூா் இளைஞா் மாயம்
ஆறுமுகனேரி அருகே உள்ள குரும்பூரில் மாயமான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிரசாத் குமாா்
ஆறுமுகனேரி அருகே உள்ள குரும்பூரில் மாயமான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குரும்பூா், சுந்தராஜபுரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பிரசாத் குமாா் (30). பொறியியல் பட்டதாரியான இவா், உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாம்.
இது குறித்து, குரும்பூா் காவல் நிலையத்தில் தங்கராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரசாத் குமாரை தேடி வருகின்மறனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






