ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி

கோவில்பட்டியில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Army soldier died

பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

கோவில்பட்டியில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிசா மாநிலம் பாலேஸ்வா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தீபக் சாகு (25). இவா் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ள சுமாா் 8 பேருக்கு சமையல் செய்து கொடுத்து வந்ததாராம்.

இந்த நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மாடியில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்ததில் காயம் அடைந்தாா்.

அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.