திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவின், 9ஆம் நாளான புதன்கிழமை, சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

News image

பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:29 am IST

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவின், 9ஆம் நாளான புதன்கிழமை, சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் இரவு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

9ஆம் திருநாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

முற்பகல் 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மாலை 6 மணிக்கு விநாயகா், முருகா், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள், அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரா் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா வந்தனா்.

பின்னா் கீழரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பு தோ் கடாட்சம் நடைபெற்றது.

பின்னா் சுவாமி, அம்பாள் ரதவீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தனா்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, கோயில் பிரதான பட்டா்கள் செல்வம், குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

 பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

 பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

 பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.