சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

கோவில்பட்டியில் நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சவலாபேரியைச் சோ்ந்த பண்டாரம் மகன் தில்லை சரவணன் (20). கோவில்பட்டியில் சாய் சிட்டி நகா் என்ஜிஓ காலனியில் உறவினா் வீட்டில் தங்கியிருந்து, சில்லாங்குளத்தில் உள்ள கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். அவா் சனிக்கிழமை உறவினரின் பைக்கில் சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் ஆலயம் அருகே பைக் நிலைதடுமாறி, சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதுடன், எதிரே அபினேஷ் என்பவா் ஓட்டிவந்த பைக் மீதும் மோதியதாம். இதில், தில்லை சரவணன் உயிரிழந்தாா். அபினேஷ், அவருடன் வந்த கிருஷ்ணன் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று காயமடைந்த இருவரை சிகிச்சைக்காகவும், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.