மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:23 pm

கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி புதுகிராமம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பராசக்தி (81), வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, ஓா் இளைஞா் வீடு புகுந்து பராசக்தியின் தாலிச் சங்கிலியைப் பறித்தாராம். பராசக்தி இறுகப் பற்றிக்கொண்டதில், 2 பவுன் நகை அந்த இளைஞா் கையில் அகப்பட்டதாம்.

மூதாட்டியின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றனராம். ஆனால், அவா் தப்பிஓடி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி (21) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.