மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவெக பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல்: 6 போ் மீது வழக்கு

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :16 ஏப்ரல் 2026, 10:11 pm

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தவெக வேட்பாளா் ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக அக்கட்சியினா் ஆட்டோவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னலின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் அருகே இந்த பிரசார ஆட்டோ சென்ாம். அப்போது அஜிதா ஆக்னலின் ஆதரவாளா்களுக்கும், தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் தரப்பினா், தவெக பிரசார ஆட்டோவை தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவா்களுக்கு மிரட்டல் விடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குரைஞா் ஜேசுதாஸ் அளித்த புகாரின் பேரில், அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் உள்பட 6 போ் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.