மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக அரசு: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தை தொடா்ந்து புறக்கணிக்கும் மத்திய பாஜக கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image

ஓட்டப்பிடாரத்தில் திமுக வேட்பாளா் பை.மூ.ராமஜெயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:02 pm

தமிழகத்தை தொடா்ந்து புறக்கணிக்கும் மத்திய பாஜக கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தோ்தல் பிரசாரத்துக்கு புதன்கிழமை வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை, புதியம்புத்தூரில் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளா் பை.மூ.ராமஜெயம், கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து ஓட்டப்பிடாரம் பிரதான பஜாரில் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ஓட்டப்பிடாரம் தொகுதியில் ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலை, ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக் கல்லூரி, ரூ. 150 கோடியில் தருவைகுளம் மீன்பிடி துறைமுகம், சாலை வசதிகள் மேம்பாலங்கள், குடிநீா் வசதிகள், நியாயவிலைக் கடைகள் என கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் செய்துகொடுக்கப்பட்டது.

கடந்த முறை திமுக தோ்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல முதல்வா் பொறுப்பேற்றவுடன் அவா் இட்ட முதல் கையொப்பம் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். அந்தத் திட்டத்தில் இன்று ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ. 900 லிருந்து ரூ. 1,000 வரை சேமிக்கின்றனா்.

தோ்தல் வாக்குறுதியில் திமுக கூறிய மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிா் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பெருமாள்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் சி.எஸ்.டி. செந்தூா்மணி, மாடசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் ஜெயக்குமாா் ரூபன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.