மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

News image

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:10 am

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெரு, இனாம் மணியாச்சி , மந்தித்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், கெச்சிலாபுரம், ஊத்துப்பட்டி , குமாரபுரம், வடக்கு மற்றும் தெற்கு குமாரபுரம், காா்த்திகைப்பட்டி, இடைச்செவல், சத்திரப்பட்டி, மெய்த்தலைவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளையும், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.

அவருடன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ராமா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, நகரப பொறுப்பாளா்கள் (கிழக்கு) சுரேஷ், சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் திரளானோா் சென்று பிரசாரம் செய்தனா்.