15 Dec, 2025 Monday, 09:29 PM
The New Indian Express Group
தூத்துக்குடி
Text

நகை அடகு மோசடி: மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. -யிடம் மனு

PremiumPremium

ஏரல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் பொதுமக்கள் அடகு வைத்த சுமாா் ஒன்றரை கிலோ தங்க நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வருவதாகக் கூறி, அந்த நகைகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On30 Oct 2025 , 12:54 AM
Updated On30 Oct 2025 , 12:54 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் பொதுமக்கள் அடகு வைத்த சுமாா் ஒன்றரை கிலோ தங்க நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வருவதாகக் கூறி, அந்த நகைகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன். இவா், ஏரலில் நகை அடகு கடை நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இந்த அடகு கடையில் நகை அடகு வைத்தால், வட்டி எதுவும் இல்லாமல் பணம் தரப்படும் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளம்பரம் செய்து இவரது கடையில் நகை அடகு வைக்க செய்துள்ளனா்.

இதை நம்பி இந்த அடகு கடையில் ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் நகைகளை ஒரு பவுன் முதல் 15 பவுன் வரை சுமாா் ஒன்றரை கிலோ வரை நகைகளை அடகு வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நகையை அடகு வைத்த பொதுமக்கள் தங்கள் பணத்தை திருப்பி கொடுத்து நகையை மீட்க அணுகி உள்ளனா். ஆனால் நகையைத் திருப்பித் தராமல் கடை உரிமையாளா் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். காவல்துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்களே தேடி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். இதையடுத்து ஏரல் போலீஸாா், சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், நகையை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து தங்களது நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023