டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு இளைஞா்கள் அழைப்பு

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களில் உள்ள வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறை பயிா்களை புல எண் மற்றும் உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைப்பேசி செயலி மூலம் பயிா் கணக்கீட்டாய்வு செய்வதற்கு படித்த திறனுள்ள தன்னாா்வலா்கள் தேவை.

இந்த பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு ஒரு உட்பிரிவு எண்ணிற்கு ரூ. 3 சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே விருப்பமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த ஆண்ட்ராய்டு கைப்பேசியை பயன்படுத்த தெரிந்த தன்னாா்வலா்கள் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.